மிக முக்கியமான இயற்கை சார்ந்த அழகு குறிப்புகளை தமிழில் (Beauty Tips in Tamil ) வழங்குவதற்கு பாட்டி வைத்தியம் ( Patti Vaithiyam ) குழு பெருமை கொள்கிறது. உடல் மற்றும் முக அழகினை பராமரிப்பது மனிதர்களுக்கு ஆத்ம திருப்தியை கொடுக்கிறது. என்றும் 16 என்ற கூற்றின் படி வாழ அனைவருக்கும் ஆசைகள் அதிகம். இதனால் பாட்டி வைத்தியம் அழகு குறிப்புகள் பற்றி பல ஆய்வுகள் மேற்கொண்டு இங்கே பதிவிட்டுள்ளோம்.
ரசாயனம் சோப்பு ஓர் ஆபத்தே!
நம் உடலை அழகான முறையில் பராமரிப்பது அனைவரது தலையாய கடமைகளில் ஒன்று. இந்த அவசர கால சூழ்நிலையில் நாம் இதனை செய்ய தவறுகின்றோம். இத்தகைய சூழ்நிலையில் செயற்கை அழகு சாதன பொருட்களில் நம் கவனம் செல்கிறது. இது மிக ஆபத்தான ஒன்று.
இயற்கை மூலிகை குளியல் பொடி
பெண்கள் மற்றும் ஆண்கள் தங்கள் அழகு சம்பந்தமான விஷயங்களை மேன்படுத்த வீட்டுச்சூழ்நிலையில் தயார் செய்த குளியல் பொடியைத் தான் உபயோகிக்கவேண்டும். இந்த குளியல் பொடியானது புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கான அற்புத மேனி பராமரிப்பு பொக்கிஷம் ஆகும், இயற்கை மூலிகை குளியல் பொடி ஆனது காலை மாலை இருவேளைகளில் குளிக்கும் போது ரசாயன சோப்பிற்கு பதிலாக பயன்படுத்தலாம்.
இந்த குளியல் பொடியில் கடலை பருப்பு, பாசிப்பருப்பு, கஸ்தூரி மஞ்சள், ஆவாரம் பூக்கள், ரோஜா இதழ்கள், சம்பங்கி மொட்டுகள் மற்றும் பல மூலிகை பொருட்கள் கொண்டு தயாரிக்கப்படுகிறது.
இப்பொடியை ஆண்கள் மற்றும் பெண்கள் இருபாலரும் உபோயகப்படுத்தலாம்.கஸ்தூரி மஞ்சள் மட்டும் ஆண்கள் தவிர்க்கலாம். புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு சோப்பு மற்றும் ஷாம்புகளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
ரசாயன குளியல் சாதனைகளால் பல்வேறு சரும பிரச்சனைகள் வரக்கூடும். குளியல் பொடியை பெரியவர்களுக்கு ஃபேஸ் பேக்காக பயன்படுத்த பாட்டி வைத்தியம் பரிந்துரைக்கிறது. இந்த குளியல் பொடியை ரோஸ் வாட்டருடன் சேர்த்துக் கொள்வது பெரியவர்களுக்கு சிறந்த ஃபேஸ் பேக்காக செயல்படுகிறது.
நம்ம பாட்டியின் மூலிகை குளியல் பொடி:
இந்த பரபரப்பான உலகில், தங்கள் வீட்டில் இந்த மூலிகை குளியல் பொடியை தயாரிக்க இயலாத நபர்கள் நம்ம பாட்டியின் வீட்டு தயாரிப்பில் உருவான மூலிகை குளியல் பொடியை வாங்கி பயன் அடையாளம். கீழே உள்ள இணையதள முகவரிக்கு சென்று ஆர்டர் செய்யலாம் அல்லது வாட்ஸாப்ப் மூலமும் வாங்கிக்கொள்ளலாம். குளியல் பொடி உங்கள் இல்லம் தேடி வரும். Bath powder Buy Link Click here
குளியல் பொடியின் மருத்துவ குணங்கள்
☘️ வியர்க்குருக்கு கட்டிகள் உங்களுக்கு வராது
☘️ கண்கள் மற்றும் கழுத்தை சுற்றி உள்ள கருவளையங்கள் குறைய ஆரம்பிக்கும்
☘️ பருக்கள் வராமல் தடுக்கும்
☘️ பருக்கள் மூலம் ஏற்படும் வடுக்களை நீக்கும்
☘️ நாள்முழுவதும் இதில் இருந்து வரும் மூலிகை வாசம் உங்களுக்கு புத்துணர்வு கொடுக்கும்
☘️ நீங்கள் இதுவரை பயன்படுத்திய குளியல் பொடிகளை விட முற்றிலும் வித்தியாசமாக இருக்கும்
☘️ ஒருமுறை பயன் படுத்தி பாருங்கள் உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும்
மூலிகை கூந்தல் எண்ணை:
தலைக்கு தேய்க்கும் தேங்காய் எண்ணையுடன் கறிவேப்பிலை, நெல்லிக்காய், மருதாணி இலைகள், பூண்டு மற்றும் செம்பருத்தி இலைகளைப் பயன்படுத்தி வீட்டிலேயே கூந்தல் எண்ணெயைத் தயாரிக்க நம்ம பாட்டி பரிந்துரைக்கிறார்.
வாரத்திற்கு இரண்டு முறை எண்ணெய் தேய்த்துக் குளிப்பது கூந்தலைப் பராமரித்து, முடி நன்றாக வளரும். இதனால் உடலும் குளிர்ச்சியாகிறது. இந்த எண்ணெய் பொடுகு மற்றும் பேன் வராமல் தடுக்கிறது.